பாத்திரக்கடையில் பொருட்கள்,பணம் திருட்டு..!

கோவை சரவணம்பட்டி, சிவானந்தபுரம் சக்தி மெயின் ரோட்டில் எவர்சில்வர் பாத்திரக்கடை நடத்தி வருபவர் சம்பத் ( வயது 44 )இவர் நேற்று முன்தினம் இரவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று வந்து பார்த்த போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்த 5.750 கிலோ எவர்சில்வர் பாத்திரங்கள ரூ 70 ஆயிரம்பணம் ஆகியவற்றையாரோ திருடி சென்று விட்டனர் கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்து இந்த திருட்டை மர்மக்கும்பல் நடத்தியுள்ளது..இது குறித்து சம்பத் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.