நாய்கள் பலி: ஒருவர் மீது வழக்கு

 நாய்கள் பலி: ஒருவர் மீது வழக்கு

கோவை சேரன் மாநகர் பகுதியில் சேர்ந்தவர் முத்து என்பவரின் மகன் ஆஸ்டின். இவர் கோவை ரத்தினபுரி பகுதியில் தனது 2 நாய் குட்டிகளுடன் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வேகமாக வந்த கார் ஒன்று நாய் மீது மோதியது. இதில் அந்த இரண்டு நாய்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதை அடுத்து ஆஸ்டின் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .புகாரின் பேரில் போலீசார் காரை ஓட்டி வந்த ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் மீது வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.