சர்சையில் முடிந்த ரோபோ நாய் …

தேசிய தலைநகர் தில்லியில் தெற்குல நாடுகளின் சார்பில் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. பாரத் மண்டபத்தில்  பிப்.16 முதல் தொடங்கிய இந்த மாநாட்டை நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். உலகம் முழுவதும் இருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் ஒருங்கிணைப்பு குறைபாடு மற்றும் நீண்ட நேரம் காத்திருப்பு காரணமாக பொதுமக்கள் சிரமம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் பல புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்த ரோபோ நாய் வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது. இதற்கிடையில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் மாணவர்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் Unitree Robotics நிறுவனத்தின் ‘யுனிட்ரீ கோ2’ ரோபோ நாயை தாங்களே உருவாக்கியதாக கூறி காட்சிப்படுத்தினர்.இந்த ரோபோ நாயை ‘டிஜே ரோபோட்’ என்று பெயரிட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் பலர் இது சீன தயாரிப்பு என கூறியதால் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அந்த மாணவர்கள் மாநாட்டில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மாநாட்டில் புதிய சர்ச்சையாக மாறியுள்ளது.