கோவை மே 16 கோவை மாவட்டம் பேரூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர் உமாசங்கர் (வயது 59) இவர் தனது மகளின்திருமணத்திற்காக கடந்த ஏப்ரல் 2 – ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு,பீரோவில் இருந்த 12 சவரன் தங்க நகைகள், 878 கிராம் வெள்ளி மற்றும் ரூ 1 லட்சம் பணம் திருட்டுபோனது தெரியவந்தது.இதுகுறித்துபாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில் பேரூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் . கார்த்திகேயன் உத்தரவின்பேரில், விசாரணை சிறப்பு குழுஅமைக்கப்பட்டது.
தீவிரவிசாரணையின் போது, பேரூர் பகுதியில் வசிக்கும் காசிநாதன் மகன் சந்தானம் (வயது 28) என்பவர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது.இதைத்தொடர்ந்து சந்தானத்தை கைது செய்த காவல் துறையினர், மேலே குறிப்பிடப்பட்ட திருட்டுச் சொத்துகளை அவரிடமிருந்து பறிமுதல் செய்துள்ளனர்.மேலும் விசாரணையில், சந்தானம் தொண்டாமுத்தூர் காவல் நிலைய திருட்டு வழக்குகளிலும் தொடர்புடையவர் என்பதுதெரியவந்தது.அந்த அந்த வழக்குகளில் களவாடிய 20 சவரன் தங்க நகைகள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. குற்றவாளிடமிருந்து 3 வழக்குகளில் தொடர்புடைய 32 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 27 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.கொள்ளையின் சந்தானம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இந்தக் கொள்ளை வழக்கில் துரிதமாக துப்பு துலுக்கி கொள்ளையனை கைது செய்து நகைகள்மற்றும் பணத்தை மீட்ட தனிப்படையினரை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் பாராட்டினார்.
வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன்கைது. 33 பவுன் நகை – பணம் பறிமுதல் .
