பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படும் முழு நீள கரும்பு..

நீலகிரி மாவட்டம், உதகை என்.சி.எம்.எஸ் வளாகத்தில், பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப
அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படும் முழு நீள கரும்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டார். உடன் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் வாஞ்சிநாதன் உட்பட பலர் உள்ளனர்.