மேட்டுப்பாளையத்தில் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு தந்த காங்கிரசார் – வைரலாகும் வீடியோ.!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு
தந்த காங்கிரசார்..

தனது தொகுதியான வயநாட்டிற்கு செல்லும் ராகுல் காந்தி விமான மூலம் கோவை வந்தார் . ராகுல் காந்திக்கு கோவை மாவட்ட காங்கிரசார் சிறப்பான வரவேற்பு தந்தனர். விமான நிலையத்திலிருந்து மேட்டுப்பாளையம் சாலை மார்க்கமாக உதகை செல்லும் ராகுல்காந்தி மேட்டுப்பாளையம் காங்கிரசார் உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பு நிகழ்ச்சியில் நகரத் காங்கிரஸ் தலைவர் தங்கமணி, துணைத் தலைவர் ரஹ்மத்துல்லா, மாவட்ட தலைவர் வி.எம்.சி மனோகரன், மேட்டுப்பாளையம் நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாலாஜி, வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆகாஷ், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர்கள் சேக் அல் அமீன், ரங்கநாதன், தேசிய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஜீ.வி நவீன்குமார் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் திரளான பொதுமக்கள் பங்கு பெற்றனர்..

தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்ட பிறகு . முதன் முறையாக, தனது தொகுதியான வயநாட்டிற்கு வருகை தரும் ராகுல் காந்தி முன்னதாக நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள எல்லநள்ளி பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் விண்வெளி வீரா் ராகேஷ் சா்மாவை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. பின்னா் மதிய உணவுக்குப் பிறகு கூடலூா் செல்லும் வழியில் முத்தநாடுமந்து பகுதியில் உள்ள தோடா் பழங்குடியின மக்களை சந்திப்பதுடன், அவா்கள் வழிபடும் கோயிலையும் பாா்வையிடுகிறாா். அதன் பின் சாலை மார்க்கமாக கூடலூர் வழியாக வயநாடு செல்கிறார்.

ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்ட காவல் துறையினா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்..