மின்சாரம் தாக்கி புது மாப்பிள்ளை பரிதாப பலி- இன்ஜினியர், வீட்டு உரிமையாளர் மீது வழக்குபதிவு ..!

கோவை : திண்டுக்கல் மாவட்டம் திம்மண்ண நல்லூர், தீமந்த நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சிவமணி முத்து(வயது 26)இவரது மனைவி துர்கா தேவி ( வயது 19)இவர்கள் இருவரும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர் .இருவரும் கோவை மாவட்டம் சோமனூர் சாமளாபுரம் பகுதியில வசித்து வந்தனர். சிவமணி முத்து கட்டிட சென்ட்ரிங் வேலைக்கு சென்று வந்தார். இவர் நேற்று சின்னியம்பாளையம் தங்கம்மன் நகரில் உள்ள கண்ணன் என்பவரது கட்டிடத்தில் முதல் மாடியில் சென்ட்ரிங் வேலை செய்து கொண்டிருந்தார் . அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார் . சிகிச்சை தனியார்  மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து மனைவி துர்கா தேவி பீளமேடு போலீசில் புகார் செய்தார் .போலீசார் அந்த கட்டிடத்தின் இன்ஜினியர் சுரேஷ் ,வீட்டு உரிமையாளர் கண்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.