வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம். 2பெண்கள் கைது.

கோவை மே 13

கோவை ஆர். எஸ். புரம், பட்டுநூல்காரர் சந்தில் உள்ள ஒரு வீட்டைவாடகைக்கு எடுத்து விபச்சாரம் நடப்பதாக ஆர்.எஸ்.புரம் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் முத்து நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அழகிகளை வைத்துவிபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இதில் நடத்தி வந்த ஆர். எஸ். புரம். மெக்ரிக்கர் ரோட்டை சேர்ந்த விஜயா (வயது 47) பூ மார்க்கெட் , லங்கா கார்னர் வீதியைச் சேர்ந்த லதா (வயது 45 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்து 2 செல்போன்களும், 8 காண்டமும் பறிமுதல் செய்யப்பட்டது.