லாட்ஜில் விபசாரம்: அழகிகள் தப்பி ஓட்டம் – வாலிபர் கைது.!!

கோவை பீளமேடு சர்வதேச விமான நிலைய ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக பீளமேடு போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் நேற்று இரவு அந்த லாட்ஜில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குள்ள 3-ம் நம்பர் அறையில் விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆவராம்பாளையம், இளங்கோ நகரை சேர்ந்த ராகுல் (வயது 27) கைது செய்யப்பட்டார்.அழகிகள் தப்பி ஓடிவிட்டனர்.ராஜா என்பவர் தலைமறைவாகி விட்டார்.இவர்களை தேடி வருகிறார்கள்.