வீட்டில் விபசாரம – 3 அழகிகள் கைது..!

கோவை : ரத்தினபுரி ஆறுமுகம் கவுண்டர் வீதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக ரத்தினபுரி போலீசுக்கு நேற்று இரவு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் சிவகுமார் அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அங்கிருந்த அழகிகள் தாமரைச்செல்வி ( வயது 31) திருப்பூர் பவித்திரா ( வயது 23) துடியலூர் நந்தினி ( வயது 20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஸ்கூட்டர், பணம் ரூ. 3930 பறிமுதல செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.