கோவை நகை கடையில் திருடிய 2 பெண்களுக்கு போலீஸ் வலைவீச்சு.!!

கோவை ஆர் .எஸ் . புரம் கிழக்கு பாசியக் காரலு ரோட்டை சேர்ந்தவர்  நாகேந்திரன் ( வயது 78 ) இவர் காந்திபுரம் கிராஸ் கட் ரோட்டில் நகை கடை நடத்தி வருகிறார். கடந்த 1-ந் தேதி காலையில் கடையை திறந்து வியாபாரம் செய்தார் . மாலையில் கடையை பூட்டினார். அதற்கு முன்னதாக நகைகளை சரிபார்த்த போது அதில் 2 பவுன தங்க நகைகள் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து நாகேந்திரன் காட்டூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் விரைந்து சென்று  விசாரணை நடத்தினார்கள். அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது 2 பெண்கள் நகை பார்ப்பது போல நடித்து ஒரு ஜோடி ஜிமிக்கியை திருடி சென்றது பதிவாகி இருந்தது . அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்..