அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி… சர்வதேச யோகா தினத்தில் பங்கேற்பு.!!

டெல்லி: அரசு முறை பயணமாக பிரதமர் மோடி தனி விமானத்தில் அமெரிக்காவிற்கு புறப்பட்டு சென்றார். ஐநாவில் நடைபெறும் சர்வதேச யோகா தினத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி நாளை மறுநாள் ஜோ பைடனை சந்தித்து பேசுகிறார்.

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்திலும் உரையாற்றுகிறார். அமெரிக்காவில் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு டிக்கெட் பெற போட்டா போட்டி நடக்கிறது.

பிரதமர் மோடி 6 நாட்கள் அரசு பயணமாக இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அவருடைய மனைவி ஜில் பைடன் ஆகியோரது அழைப்பின் பேரில் அவர் அமெரிக்கா சென்றுள்ளார்.

சர்வதேச யோகா தினத்தையொட்டி நாளைய தினம் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடக்கும் யோகா கொண்டாட்டத்துக்கு தலைமை தாங்கி யோகா பயிற்சி அளிக்கிறார். நாளை மறுநாள் அமெரிக்க வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அவரை கவுரவிக்கும் வகையில், ஜோ பைடனும், ஜில் பைடனும் விருந்து அளிக்கிறார்கள்.

ஜோ பைடனுடன் இருதரப்பு உறவுகள் குறித்து மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதே நாளில், அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். 23ஆம் தேதி வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினரிடையே மோடி பேசுகிறார். பிரதமர் மோடிக்கு 22ஆம் தேதி, வெள்ளை மாளிகையில் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.