காதல் தோல்வியால் பிளஸ் – 2 மாணவி தற்கொலை .

கோவை ஜூன் 4 கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள எம் .ஜி . ஆர். நகரை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் சரிகா ( வயது 17) பிளஸ் – 2 படித்து வந்தார்.இந்த நிலையில் சரி காவுக்கு “இன்ஸ்டாகிராம் ” மூலம் 21 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது .இதை தொடர்ந்து 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். மேலும் செல்போனில் பேசி தங்கள் காதலை வளர்த்துக் கொண்டனர் .இந்த நிலையில் கடந்து சில நாட்களாக அந்த வாலிபர் சரிகாவுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவர் மன வேதனையில் இருந்தார்.. இதற்கிடையில் அந்த வாலிபர் காதலிக்க மறுத்து குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் சரிகா மன உளைச்சலில் இருந்து வந்தார். வீட்டில் தனியாக இருந்த சரிகா நேற்று திடீரென்று சேலை யைவிட்டதில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பொள்ளாச்சி நகர போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் காதல் தோல்வியால் மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்தபுகாரின்பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் தோல்வியால் பொள்ளாச்சி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.