பணம் வைத்து சீட்டாட்டம் : 6பேர் கைது.

கோவை ஏப் 29 கோவைஅருகே உள்ள ஆலாந்துறையில், முருகன் கோவில் வீதியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆலாந்துறை போலீசுக்கு நேற்றுமாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குபணம் வைத்து சீட்டு விளையாடியதாக மத்வராயபுரம்ராஜேந்திரன் (வயது 67) ஆலாந்துறை முருகன் (வயது43) மத்வராயபுரம் சண்முகம் (வயது 56) ஆலந்துறை கோபால் ( வயது 57 )கே .ஜி . பாளையம் நாகராஜ் ( வயது 57) ஆலாந்துறை ஜெயக்குமார் (வயது 47 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சீட்டுவிளையாட பயன்படுத்தப்பட்ட ரூ 9 ,100 பறிமுதல் செய்யப்பட்டது.