கஞ்சா சாக்லேட் விற்பனை- ஒடிசா சிறுவன் கைது..!

கோவை துடியலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கணேசன் நேற்று அங்குள்ள செங்காளிபாளையம் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு சிறுவனை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 375 கிராம் கஞ்சா சாக்லேட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அந்த சிறுவன்  கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஒடிசாவைச் சேர்ந்த 17 வயது சிறுவன்  என்பதும் இந்த சாக்லேட்டுகளை வட மாநிலத்திலிருந்து கடத்தி வந்து கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.