பெண்ணிடம் நகை பறித்த பிரபல கொள்ளையன் கைது. தப்பி ஓடும்போது தவறி விழுந்து கை முறிந்தது.

கோவை மே 31கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியில் வசிப்பவர்55 வயது பெண். இவர்கடந்த 21 ஆ -ம் தேதி நரசிம்மநாயக்கன்பாளையம் ரோட்டில் நடந்து சென்றார்.அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அவரின் பின்னால் வந்து கழுத்தில் அணிந்திருந்த 4½சவரன்* தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளார்.மேற்படி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.மேற்படி வழிப்பறி வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், உத்தரவிட்டதன் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு மேற்படி வழிப்பறி வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை காவல்துறையினர் தேடி வந்தனர். அச்சமயம் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜெயக்குமார் மகன் மணிகண்டன் (30) என்பவர் வீரபாண்டியில் உள்ள பூங்கா அருகே இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கீழே விழுந்து வலது கையில் முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது. காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து விசாரணை செய்ததில் மேற்படி நபர் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய வழிப்பறி வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரிய வந்தது. இந்நிலையில் மேற்படி நபரை கைது செய்து விசாரணை செய்ததில் அவர் மீது அவிநாசி பாளையம், பல்லடம், திருப்பூர், ஈரோடு, திருச்செங்கோடு, கோவில்பாளையம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி போன்ற பல வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் மேற்படி நபரை கைது செய்து அவரிடமிருந்து பெரியநாயக்கன்பாளையம் வழிப்பறி வழக்கின் சொத்தான*4½ தங்க நகைகள்* மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்த இரு சக்கர வாகனம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.