நடமாடும் அரசு அலுவலகம்.!!

புதுடெல்லி: உத்​தரபிரதேசத்​தில் மாற்​றுத்​திற​னாளி​கள் குறை​களை தீர்க்க நடமாடும் அரசு அலு​வல​கம் ரேபரேலி மாவட்​டத்​தில் அமைக்​கப்​படு​கிறது. உ.பி.​யின் ரேபரேலி மாவட்​டத்​தில் சுமார் 15,000 பதிவு செய்​யப்​பட்ட மற்​றும் நூற்​றுக்​கணக்​கான பதிவு செய்​யப்​ப​டாத மாற்​றுத்​திற​னாளி​கள் உள்​ளனர். இவர்​கள் மாற்​றுத்​திற​னாளி சான்​றிதழ், கல்வி நிறு​வனங்​களில் சேரு​வதற்​கான இடஒதுக்​கீடு, அரசு வேலை​வாய்ப்பு உள்​ளிட்ட கோரிக்​கைகள் தொடர்​பாக பல்​வேறு அரசு அலு​வல​கங்​களுக்கு செல்ல வேண்​டிய கட்​டா​யம் ஏற்​படு​கிறது.

இதில் அவர்​களுக்கு ஏற்​படும் சிரமங்​களுக்கு முற்​றுப்​புள்ளி வைக்​கும் வகை​யில் ஒரு முக்​கிய உத்​தரவை ரேபரேலி மாவட்ட ஆட்​சி​யர் ஹர்​ஷிதா மாத்​தூர் பிறப்​பித்​துள்​ளார்.