மக்களைத் தேடி மருத்துவ திட்டம் – ஆலங்காயம் துணை இயக்குனர் திடீர் ஆய்வு..!

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வட்டாரம், ஆலங்காயம் பேரூராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு ரெட்டி தெருவில் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் T.R. செந்தில் MBBS., DPH..MPH., மக்களைத் தேடி மருத்துவ திட்டம் குறித்து வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தார்.

WHV மூலம் வழங்கப்பட்ட MTM மருந்து பெட்டகத்தில் உள்ள மாத்திரைகளையும், பராமரிக்கும் பதிவேடுகளை பார்வையிட்டும், பொது மக்களிடம் மக்களைத் தேடி மருத்துவ குழு வருகின்றனரா என்று கேட்டும் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் மரு.ச.பசுபதி MD., மற்றும் அனைத்து சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்..