கோவை மே 16கோவை மாவட்ட காவல்துறையின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அதில் கூறியிருப்பதாவது:-சேலம்- கொச்சின் ரோட்டில் மரப்பாலத்தில் அமைந்துள்ள இரயில்வே கீழ்பாலத்தை திரும்பக்கட்டும் பணி நடைபெற உள்ளதால் இன்று ( 16 -ந் தேதி) முதல் கோவையிலிருந்து பாலக்காடு மற்றும் பாலக்காட்டிலிருந்து கோவைக்கு செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் அனைத்தும் மரப்பாலம் சாலை கீழ் பாலம் வழியாக செல்ல இயலாது.இந்நிலையில் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவையிலிருந்து பாலக்காடு மார்க்கம்
இலகுரக வாகனங்கள் (ஒரு வழிப்பாதை)
நகரப்பேருந்து மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டும் மதுக்கரை சந்திப்பில் கி.மீ 168/4 இடது புறம் திரும்பி குவாரி ஆபீஸ் சாலை குரும்பபாளையம் சாலை மதுக்கரை மார்க்கெட் சாலை வழியாக கிமீ 170/8 செட்டிபாளையம் பிரிவுக்கு செல்ல வேண்டும்.கனரக வாகனங்கள் இருவழிப்பாதை)
ஆத்துப்பாலம் சந்திப்பில் இருந்து இடது புறம் திரும்பி குறிச்சி. ஈச்சனாரி சாலை வழியாக சென்று (என்.எச் 544) சேலம் கொச்சின் சாலையில் கற்பகம் காலேஜ் சந்திப்பில் வலது புறம் திரும்பி செல்ல வேண்டும்.
பள்ளி வாகனங்கள் மற்றும் கல்லூரி வாகனங்கள் (இருவழிப்பாதை)
ஆத்துப்பாலம் சந்திப்பு, சுந்தராபுரம் சந்திப்பில் (கி.மீ. 325/2) வலதுபுறம் திரும்பி குறிச்சி கண்ணமநாயக்கனுர் சாலை (கிமீ 6/2) இடதுபுறம் திரும்பி ( என். எச். 544) சேலம் கொச்சின் சாலை (கி.மீ-164/4) சென்று வலதுபுறம் திரும்பி செல்ல வேண்டும். எஸ். இ டி. சி, டி.என் எஸ்.டி.சி, கே.எஸ் ஆர்.டி. சி பேருந்துகள் (இருவழிப்பாதை)
ஆத்துப்பாலம் சந்திப்பு, சுந்தராபுரம் சந்திப்பில் (கி.மீ. 325/2) வலது புறம் திரும்பி குறிச்சி கண்ணமநாயக்கனுர் சாலை (கி.மீ 6/2) வலதுபுறம் திரும்பி மதுக்கரை மார்க்கெட் வழியாக கி.மீ 170/8 செட்டிபாளையம் பிரிவுக்கு செல்ல வேண்டும்.
பாலக்காட்டிலிருந்து கோவை மார்க்கம்
இலகுரக வாகனங்களுக்கு மட்டும் (ஒரு வழிப்பாதை)
நகரப்பேருந்து மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டும் கி.மீ 170/8 செட்டிபாளையம் பிரிவில் வலதுபுறம் திரும்பி விறகுக்கடை பாலம் வழியாக சென்று ஏ.சி.சி.சிமெண்ட் தொழிற்சாலை வழியாக செல்லவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மதுக்கரை மரப்பாலம் ரயில்வே பாலம் அகலப்படுத்தும் பணி தொடக்கம் இன்று முதல் போக்குவரத்துமாற்றம்.
