இரண்டு வீடுகளில் நகை – பணம் கொள்ளை.

கோவை ஜூன் 24 கோவை சாய்பாபா காலனி, கே. என். புதூர் கவுண்டப்பன் தெருவை சேர்ந்தவர், இஜாஸ் அகமது ( வயது 32) ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.. சம்பவத்தன்று இவரது வீட்டின் கதவை உட்பக்கமாக பூட்டிவிட்டு படுக்கை அறைக்கு சென்றார். அதன்பிறகு அவரது வீட்டு வளாகத்துக்குள் மர்ம ஆசாமி ஒருவன் நுழைந்தார் . ஜன்னல் கதவை திறந்தார். அதன் பிறகு கொசு வலையை கிழித்து கையை உள்ளே நுழைத்து கதவை திறந்து வீட்டிற்குள் புகுந்தார் .பின்னர் அந்த நபர் பீரோவை நைசாக திறந்து அங்கிருந்த சிங்கப்பூர் டாலர் 5, அரேபியா ரியால் 60, தங்க நாணயங்கள் 4 பணம் ரூ 25 ஆயிரம் ஆகியவற்றை திருடினார். இதை தொடர்ந்து அருகில் உள்ள இஜாஸ் அகமதுவின் மாமனார் வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்து அங்கிருந்த ரூ 8 ஆயிரம்பணம் ,4 தங்கள் நாணயங்களை திருடிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.