ஏப் 2 கோவை குனியமுத்தூர், மேட்டுக்காடு எம்ஜிஆர் வீதியை சேர்ந்தவர் தினகரன் ( வயது 40 )இவர் நேற்று முன்தினம் அவரது வீட்டின் மாடியில் மனைவியுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது யாரோ தரைத்தளத்தில்உள்ள கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 14 பவுன் தங்க நகைகள் பணம் ரூ.37,500 ஆகியவற்றில் திருடி சென்று விட்டனர். இது குறித்து தினகரன் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆள் இருந்த வீட்டில் நகை – பணம் திருட்டு கோவை.
