கோவை ஜூன் 7 கோவையை சேர்ந்த 29 வயது வாலிபரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான் சி.பி.ஐ அதிகாரி எனக் கூறி அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் உங்கள் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி வெளிநாட்டுக்கு போதை பொருள் பார்சல் அனுப்பப்பட்டுள்ளது. எனவே உங்கள் வங்கி கணக்குகளை நாங்கள் ஆய்வு செய்ய வேண்டும்.எனவே அதில் இருக்கும் பணத்தை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். நாங்கள் ஆய்வு மட்டும் செய்துவிட்டு உங்கள் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கிறோம் என்று கூறினார் அனுப்ப தவறினால் உங்களை கைது செய்து விடுவோம் என்று மிரட்டினார்.இதை நம்பி அந்த வாலிபர் தனது வங்கி கணக்கில் இருந்துரூ. 13 லட்சத்தை அந்த நபர் சொன்ன வங்கி கணக்கு அனுப்பி வைத்தார் .ஆனால் அவர்கள் அந்த பணத்தை மீண்டும் அனுப்பவில்லை. அப்போதுதான் அந்த வாலிபருக்கு தான் ஏமாற்றப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் போலீசார் விசாரணைநடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட நபர் மத்திய பிரதேசத்தை சேர்ந்தசந்தீவ் திவாரி ( வயது 34)என்பது தெரியவந்தது. இதை யடுத்து போலீசார் மத்திய பிரதேசத்துக்கு சென்று ஒரு வீட்டில் பதுங்கி இருந்த அவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர் .அதில் அவர் 20க்கும் மேற்பட்டவரிடம் சிபிஐ அதிகாரி எனக் கூறி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்தது தெரியவந்தது உடனே போலீசார் சந்தீவ் திவாரியை கைது செய்தனர் .அவரிடம் இருந்து செல்போன், வங்கி கணக்கு புத்தகம் போன்ற பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து இதுபோன்று அவர் யாரிடமாவது மோசடி செய்துள்ளாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்..
கோவையில் சி.பி.ஐ. அதிகாரி எனக்கூறி 20 பேரிடம் கோடி கணக்கில் மோசடி.வட மாநில வாலிபர் கைது.
