மளிகை கடைக்குள் புகுந்து திருடிய ஆசாமி கையும் களவுமாக சிக்கினான்.!!

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள ராவுத்தூர், பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்தவர்ராஜபாண்டியன். இவரது மகன் அருண் (வயது 34)மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு கடையை திறப்பதற்காக இவரது தாயார் சென்றார். அப்போது கடைக்குள் இருந்து ஏதோ ஒரு சத்தம் கேட்டது. உடனே தனது மகன் அருணுக்கு தகவல் கொடுத்தார். அவர் கடை ஷட்டரை திறந்து பார்த்த போது உள்ளே இருந்து ஒரு ஆசாமி வெளியே தப்பி ஓட முயன்றார். அவனை கையும் களமாக பிடித்து சிங்காநல்லூர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவனை கைது செய்தனர். விசாரணையில் அவன் கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகரை சேர்ந்த மது (வயது 40 ) என்பது தெரிய வந்தது. இவர் கடையின் மேற்கூரையை பிரித்து திருடியிருப்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் விசாரணை நடந்து வருகிறது.