குஜராத் தொங்கும் பாலம் விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது – முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..

மோர்பி தொங்கு பாலம் விபத்தில் பல அப்பாவி உயிர்கள் பலியாகி இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் முதல்வர் மு.

க. ஸ்டாலின். மேலும் , விபத்தில் சிக்கி காணாமல் போனவர்கள் விரைவில் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

குஜராத் மாநிலத்தில் மோர்பி நகரில் மச்சி ஆற்றின் குறுக்கே தொங்கு பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் 100 ஆண்டுகள் பழமையான பாலம் ஆகும். சிதிலமடைந்து இருந்த அந்த பாலத்தை சீரமைக்கும் பணி கடந்த ஆறு மாதங்களாகவே நடந்து வந்தன . தற்போது சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததை அடித்து மக்களின் பயன்பாட்டிற்காக குஜராத்தி புத்தாண்டு தினமான கடந்த 26ஆம் தேதி அன்று இந்த தொங்கு பாலம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று மாலை 6:00 மணி அளவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் அந்த பாலத்தின் மீது குவிந்தார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று ஏராளமானோர் திரண்டு நின்றிருந்தனர் அந்தப் பாலத்தில். அப்போது எடை தாங்க முடியாமல் அந்த பாலம் திடீரென்று அறுந்து விழுந்தது. இந்த பெரும் விபத்தில் பாலத்தில் நின்று கொண்டிருந்த ஏராளமானோர் ஆற்றுக்குள் விழுந்தார்கள்.

தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினரும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டார்கள் . மீட்பு பணியில் ராணுவம் ,கடற்படை ,விமானப்படை , தீயணைப்பு படையினரும் தீவிரமாக உள்ளனர். அதிகாலை 3 மணிக்கு ராணுவ வீரர்கள் குழு சம்பவ இடத்தை சென்றடைந்திருக்கிறது. ஆற்றுக்குள் விழுந்தவர்களில் பலர் நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டார்கள் . இது இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று தெரிய வந்தது. மேலும் நீரில் மூழ்கிய மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இன்று அதிகாலை நிலவரப்படி பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்திருக்கிறது என்று குஜராத் தகவல் துறை அறிவித்துள்ளது. இதுவரைக்கும் விபத்தில் சிக்கியவர்களில் 177 பேர் மீட்கப்பட்டுள்ளார்கள். இதில் 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

இதுகுறித்து முதல்வர் முக ஸ்டாலின், ”குஜராத் மோர்பி தொங்கு பாலம் அருந்து விழுந்த விபத்தில் பல அப்பாவி உயிர்கள் பலியாகி இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று கூறியிருக்கிறார்.

மேலும், ”காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன். அதே நேரம் விபத்தில் சிக்கி காணாமல் போனவர்கள் விரைந்து பத்திரமாக மீட்கப்பட வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.