கோவை டாஸ்மாக் அருகே சூதாட்டம் – 4 பேர் கைது..!

கோவை வடவள்ளி சிறுவாணி ரோட்டில் உள்ள ஒருடாஸ்மாக் கடை அருகே பணம் வைத்து சீட்டாட்டம் நடப்பதாக வடவள்ளி போலீசுக்கு தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் விரைந்து சென்று சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டாடியதாக வடவள்ளியை சேர்ந்த குணசேகரன் ( 35 ) கோபால் ( 32 )சந்திரபோஸ் ( 34 ) புவனேஸ்வரன் ( 28 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.சீட்டாட பயன்படுத்தப்பட்ட பணமும் சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.