ஐந்து வருடமாக அரசு பள்ளி தற்போது ஒரு மாணவன் ஒரு ஆசிரியர்.

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் 77 அரசு தொடக்க பள்ளிகள் உள்ளது. இதில் காட்டியனேந்தல் அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த ஐந்து வருடங்களாக புதிய மாணவர் சேர்க்கை எதுவும் இல்லாததால் ஒரே ஒரு மாணவர் கல்வி பயின்று வருகிறார். அவர் தற்போது நான்காம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பிற்கு தேர்வாகியுள்ளார். அந்த மாணவனுக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே கல்வி கற்று கொடுத்து வருகிறார். மேலும் இந்த மாணவனுக்கு காலை உணவு பிள்ளையாரேந்தல் பள்ளியில் இருந்தும், மதிய உணவு குஞ்சங்குளம் பள்ளியில் இருந்தும் கொண்டு வரப்படுகிறது. 5 வருடமாக அட்மிஷன் இல்லாத இந்த பள்ளிக்கு புதிய சமையலறை கட்டிடம், புதிய கழிப்பறை பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது மேலும் பள்ளி திறக்கப்படும் நாளில் பள்ளிகள் சுத்தம் செய்ய வேண்டும் என்று அரசு விதி இருந்தும் இந்த பள்ளியை சுத்தம் கூட செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இதே போல் தளிர்மருங்கூர் கிராமத்தில் 5 வருடங்களுக்கு மேலாக அட்மிஷனே இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த அரசு பள்ளியில் ஒரு மாணவன் அவரும் 3ம் வகுப்பில் இருந்து 4ம் வகுப்பு சென்றுள்ளார். இந்த பள்ளியிலும் ஒரு மாணவன் ஒரு ஆசிரியர் உள்ளனர்