IFS சர்வதேச நிதி சேவை மையம் மீது நிதி மோசடி-சென்னை, கோவை உட்பட 15 க்கு மேற்பட்ட பொருளாதார குற்றபிரிவு போலீசார் இடங்களில் சோதனை..!

வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் IFS சர்வதேச நிதி சேவை மையம் மீது நிதி மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் நிதி நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை நடத்த தமிழக காவல் துறைக்கு உத்திரவிட்டுள்ளது. இதனையடுத்து சென்னை, வேலூர் , கோவை உட்பட தமிழகம் முழுவதும் 15 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையானது நடத்தப்பட்டு வருகின்றது. IFS சர்வதேச நிதிசேவை மையம் மற்றும் அதில் தொடர்புடைய நபர்களின் வீடுகளில் பொருளாதார குற்றபிரிவு போலிசார் சோதனை நடத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள IFS சர்வதேச நிதி சேவை மையத்தின் ஆடிட்டர் வெண்ணிலா என்பவரது வீட்டில் சென்னை மற்றும் கோவை பொருளாதார குற்றபிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். காலை 8 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகின்றது. ஆடிட்டர் வெண்ணிலா சென்னையில் இருந்து சொந்த வீட்டிற்கு வந்திருந்த நிலையில் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.