கோவை மே 30 கோவை ஆர் .எஸ் . புரம், மேற்கு பெரியசாமி ரோட்டை சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 45)இவர் பெரிய கடைவீதி பகுதியில் வெள்ளி கடை நடத்தி வருகிறார் .இவரது கடையில் சிவானந்தா காலனி, கண்ணப்பபுரத்தைச் சேர்ந்த குமார் மனைவி மலர்வழி என்ற சுதா (வயது 46)என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார் நேற்று கடையில் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும்போது காவலாளி இவரை சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தார் அவரிடம் ஒரு வெள்ளி தட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கையும் களவுமாக பிடித்து கடை மேனேஜரிடம் ஒப்படைத்தார். பின்னர் இவர்கடைவீதி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் மலர் விழியை கைதுசெய்தனர். இவரிடமிருந்து 164கிராம் எடை கொண்ட வெள்ளி தட்டு மீட்க்கப்பட்டது.
கடையில்வெள்ளி தட்டு திருடியபெண்ஊழியர் கைது.
