மாமனார் – மாமியாருக்கு அடி – உதை .மருமகனுக்கு வலை

கோவை மே 16

கோவை சூலூர் பக்கம் உள்ள மருதாச்சலம் நகரை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 73 ) இவரது மனைவி சரோஜினி ( வயது 73 ) இவர்களதுஇளைய மகள் அனிதாவை பாலாஜி என்பவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தனர். கருத்து வேறுபாடு காரணமாக அனிதா பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். இந்த நிலையில் நேற்று பாலாஜி தனது மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியை அனுப்பி வைக்குமாறு கேட்டார். அதற்கு அவர்கள் மறுத்தனர். இதனால் ஏற்பட்ட தகராறில் மாமனார்கருப்புசாமியையும் , மாமியார் சரோஜினியையும் அடித்து உதைத்தாராம் .இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது .அவர்கள் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து கருப்புசாமி சூலூர் போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் லூர்து ராஜ் வழக்கு பதிவு செய்து மருமகன்பாலாஜியை தேடி வருகிறார்.