கோவை ஜூன் 9 கோவை பாப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் பிரவீன் ( வயது 25)இவர் ஆவாராம்பாளையம் ரோடு -பெண்கள் பாலிடெக்னிக் சந்திப்பில் “மகாலட்சுமி புக் ஸ்டால் ” என்ற பெயரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.நேற்று இவரது கடைக்கு குடிபோதையில் சென்ற ஒருவர் தன்னை பத்திரிகைநிருபர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர்பிரவீனிடம் தங்கள் கடையில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட் கா) விற்பனை செய்யப்படுவதாக எங்களுக்கு புகார் வந்துள்ளது.இது தொடர்பாக பத்திரிகையில் எழுதி விடுவேன் . எழுதாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டினாராம். இது குறித்து அவர் ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த ஆசாமியை பிடித்து விசாரணைநடத்தினர்.விசாரணை அவர் போலி பத்திரிகை நிருபர் என்பது தெரிய வந்தது இதை யடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவரது பெயர் பிரபு ( வயது 48 )ரத்தினபுரி வ . உ . சி வீதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது அவரிடம் இருந்து போலி அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
வியாபாரியிடம் பணம் கேட்டு மிரட்டிய போலி பத்திரிகை நிருபர் கைது.
