ரோட்டில் நடந்து சென்றமுதியவர் மீதுகார் மோதி உயிரிழப்பு.

கோவை ஏப் 2 கோவை அருகே உள்ள வெள்ளலூரைசேர்ந்தவர் அசோக்குமார் (வயது 65)இவர் நேற்றுஅங்குள்ள பைபாஸ் ரோட்டில் உள்ள கள்ளபாளையம் பிரிவு சந்திப்பில் நடந்து சென்றார்.அப்போது அந்த வழியாக வேகமாக வந்து ஒரு கார் இவர் மீது மோதியது .இதில் தலையில் பலத்த காயம் அடைந்துஅதே இடத்தில் இறந்தார். இதுகுறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வுபோலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அமுதா சம்பவ இடத்திற்கு சென்றுவிசாரணைநடத்தினார். இது தொடர்பாக கார் ஓட்டி வந்த போத்தனூர் அண்ணா நகரை சேர்ந்த முத்து நடராஜ் ( வயது 32 )என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.