கோவையில் போலி இறப்பு சான்றிதழ் வழங்கிய இ-சேவை மைய உரிமையாளர் கைது..!

கோவை செல்வபுரம் எல்.ஐ.சி காலனியில் இ. சேவை மையம் நடத்தி வருபவர் சத்யராஜ்.(வயது 41) இவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தலைமை டாக்டரின் பெயரில் போலியாக முத்திரையை தயாரித்து, கையொப்பமிட்டு போலியாக இறப்புச் சான்றிதழ் வழங்கி உள்ளார். அதைப் பெற்றுக் கொண்ட நபர் அதில் உள்ள முகவரியை மாற்றுவதற்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அங்கு இதுபோன்று இறப்பு சான்றிதழ் வழங்கவில்லை என்பது போலியாக தயாரித்து இறப்பு சான்றிதம் வழங்கியிருப்பது தெரியவந்தது. இது குறித்து மருத்துவமனை மேலாளர் கிருத்திக் ஆதித்யா செல்வபுரம் போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் செல்வராஜ் விசாரணை நடத்தி இ- சேவை மைய உரிமையாளர் சத்யராஜ் மீது போலியான முத்திரையை தயாரித்தல் போலியாக ஆவணம் உருவாக்குதல் ஆகிய பிரிவுகளில வழக்கு பதிவு செய்து சத்யராஜை நேற்று கைது செய்தார். ‘பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..