கோவை சரவணம்பட்டி, விநாயகபுரம் ,சங்கரா நகரை சேர்ந்தவர் கந்தசாமி . இவரது மகன் கருணாகரன் ( வயது 27 )இவர் தென்னம்பாளையத்தில் கடந்த 6 மாதமாக சிஎன்சி மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன் தினம் இவரது வீட்டின் அருகில் 15 பேர் சேர்ந்து பட்டாசு வெடித்து பிறந்தநாள் கொண்டாடி கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதை கருணாகரன் கண்டித்தார் .இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் கருணாகரணையும் பாக்யராஜ் (வயது 45) என்பவரையும் கத்தியால் குத்தினார்கள். இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசில் கருணாகரன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக பிறந்தநாள் கொண்டாடிய 15 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
குடிபோதையில் பட்டாசு வெடித்து பிறந்தநாள் கொண்டாட்டம் – தட்டி கேட்ட இருவருக்கு கத்திக்குத்து.!!








