நீலகிரி மாவட்ட உதகை கலைஞர் அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம்

உதகை ஜூன் 24 நீலகிரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட கழக அலுவலக உதகை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட அவை தலைவர் போஜன் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அனைவரையும் வரவேற்றார். கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பா.மு.முபாரக் , சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் பரமேஸ்குமார், தென்றல் செல்வராஜ், திராவிடமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
கூட்டத்தில், கழக தலைவர் – தமிழக முதல்வர் அவர்கள் அறிவிப்பின்படி, “ஓரணியில் தமிழ்நாடு” கழக உறுப்பினர் சேர்ப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது,
முன்னதாக புதிய நகர-ஒன்றிய பொறுப்பாளர்கள், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்,
கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவிகுமார், லட்சுமி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், திராவிடமணி, காசிலிங்கம், செந்தில் ரங்கராஜ், மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா, நகர செயலாளர்கள் ஜார்ஜ், ராமசாமி, சேகரன், இளஞ்செழியன், ரமேஷ், ஒன்றிய கழக செயலாளர்கள் பரமசிவன், லாரன்ஸ், நெல்லை கண்ணன், காமராஜ், தொரை, பிரேம்குமார், பீமன், சிவானந்தராஜா, ராஜா, சுஜேஷ், ஜெகதீசன், உத்தமன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கருப்பையா, சதக்கத்துல்லா, வீரபத்திரன், பில்லன், செல்வம், உதயதேவன், அமிர்தலிங்கம், காளிதாசன், பேரூர் கழக செயலாளர்கள் பிரகாஷ்குமார், உதயகுமார், நடராஜன், சுந்தர்ராஜ், காளிதாஸ், சஞ்சீவ்குமார், ரமேஷ்குமார், சின்னவர், சுப்ரமணி, மார்டின், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் சசிகுமார், கோமதி, எல்கில் ரவி, காந்தல் ரவி, சீனி, விவேகானந்தன், ராம்குமார்,செந்தில்நாதன், ரஹமத்துல்லா, பவீஷ், வெங்கடேஷ், ஆல்வின், உமாநாத், ஜெயகுமார், சுரேஷ், பவீஷ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ், பத்மநாபன், வினோத்குமார், முரளிதரன், நகராட்சி தலைவர்கள் வாணீஸ்வரி, பரிமளா, சிவகாமி, முன்னாள் பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் ராம்குமார், சுனிதா, கீர்த்தனா, மாயன், பேரூராட்சி தலைவர்கள் கலியமூர்த்தி, ஜெயகுமாரி, கௌரி, சித்ராதேவி, ஹேமாமாலினி, வள்ளி, ராதா, சத்தியவாணி, தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் ஜெயராமன் உட்பட கழக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்,
கூட்ட முடிவில் தலைமை செயற்குழு உறுப்பினர் திராவிடமணி நன்றி கூறினார்,