லண்டனில் முதலமைச்சர் விஜய் ஒப்பந்தம் கையெழுத்திட்ட நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளாகச் சென்னையில் செயல்பட்டு வருகிறது என்றும், அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் சென்னையிலேயே செய்திருக்கலாம் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
குறுகிய பகுதியான பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டம் தவறானது என்றும், அதனை அரசு உடனடியாகக் கைவிட்டு சென்னைக்கு வெளியே 1,000 ஏக்கர் பரப்பளவில் புதிய ‘நிர்வாக நகரம்’ அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் பாமக போட்டியிடாது என்றும், யாருக்கு ஆதரவு என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறிய அவர், முந்தைய அரசுகளைப் பழிபேசுவதை விட்டுவிட்டு வேலையில்லா திண்டாட்டம், நீர் மேலாண்மை மற்றும் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு அரசு ஆக்கப்பூர்வத் தீர்வு காண வேண்டும் என்றார்.பரந்தூரில் விமான நிலையத்திற்குப் பதிலாகச் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பது சுற்றுச்சூழலைப் பாதிக்காதா எனக் கேள்வியெழுப்பிய அன்புமணி, அங்கு எந்தவொரு தொழிற்பேட்டையும் அமைக்கக் கூடாது என்றும், மீறி அமைத்தால் தாமே நேரில் களமிறங்கிப் போராட்டம் நடத்தப்போவதாகவும் எச்சரித்தார்.









