கோவை ஜூன் 19 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சுக்கு காபி கடைப்பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளியங்கிரி ( வயது 38 )விவசாயி. மேய்ச்சலுக்காக தனது 6 பசு மாடுகளைகாட்டுக்கு அவிழ்த்து விட்டிருந்தார் .அதில் 5 பசு மாடுகள் மட்டுமே திரும்பி வந்தது .ஒரு பசுமாட்டை காணவில்லை. உடனேவெள்ளியங்கிரி தேடிச்சென்ற போது அதே பகுதியில் சிறுத்தை தாக்கி பசுமாடு இறந்து கிடந்தது தெரியவந்தது .இது குறித்து தகவல் அறிந்த காரமடை வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அங்கு சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது..
சிறுத்தை தாக்கி பசுமாடு சாவு.
