கோவை ஜூன் 9 கோவையில் உள்ள ரயில் நிலையத்துக்கு தினமும் ஏராளமான ரயில்கள் வந்து செல்வதால் இந்த ரயில் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் அத்துடன் மாநகர பகுதியில் தண்டவாளம் செல்கிறது .இதன் காரணமாக தண்டவாளத்தில் கற்கள் வைப்பது ஓடும் ரயில் மீது கற்களை வீசுவது போன்ற சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் கோவை ரயில்வே போலீசார் தீவிர ரோந்து ஈடுபட்டு வருகிறார்கள் இந்த நிலையில் சென்னையில் இருந்து சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 6-50 மணிக்கு கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. வடகோவை ரயில் நிலையத்துக்கு வந்த போது அங்கிருந்துசெல்ல சிக்னல் இல்லை. அதாவது தண்டவாளத்தில் ஓரத்தில் இருக்கும் சிக்னலில் ஒளி வரவில்லை .இதனால் இன்ஜின் டிரைவர் வடகோவை ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தினார். சிறிது நேரம் கழித்த பின்னரும் சிக்னல் ஒளிராதால் சந்தேகம் அடைந்தவர் கோவை ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதற்கு அவர்கள் சிக்னல் சரியாகத்தான் இருக்கிறது என்று கூறினார். ஆனால் எஞ்சின்டிரைவர் சிக்னல் ஒளிர வில்லை என்று கூறினார். இதில் அடுத்து அனுமதி பெற்று அந்த ரயில் அங்கிருந்து புறப்பட்டது. அப்போது அந்த சிக்னல் அருகே வந்தபோது தண்டவாளத்தின் ஓரத்தில் 4 பேர் நின்று கொண்டிருந்த னர்.அவர்கள் தண்டவாளத்தில் கல்லை வைத்திருப்பதையும் எஞ்சின் டிரைவர் கண்டார்.. இதை யடுத்து அவர் ரயிலை மெதுவாக இயக்கியதால் எந்த சேதமும் ஏற்படவில்லை. உடனே அவர் இது குறித்து கோவை ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர் .அப்போது தண்டவாளத்தில் ஓரத்தில் 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில்அவர்கள் தூத்துக்குடி சேர்ந்த வின்சென்ட் ராஜ் ( வயது 20 ) விஜய சங்கர் ( வயது 21) சதீஷ்குமார் (வயது 22) புவனேஸ்வரன் ( வயது 20 )என்பது தெரிய வந்தது இவர்கள் திருப்பூரில் உள்ள பனியன் தொழிற்சாலையில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. அவர்கள் 4பேரும் சேர்ந்து தண்டவாளத்தில் கல்லை வைத்தும், தண்டவாளத்தின் அருகே உள்ள சிக்னல் பாக்சை கல்லால் உடைத்து சேதப்படுத்தியதால் இந்த சிக்னல் ஒளிராததும் தெரிய வந்தது . இதையடுத்து போலீசார் அந்த 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்துவிசாரணை நடத்தபட்டு வருகிறது.இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறியதாவது தூத்துக்குடி சேர்ந்த வின்சென்ட் ராஜ் சதீஷ்குமார் உட்பட 4பேரும் திருப்பூரில் வேலை செய்து வருகின்றனர். சதீஷ்குமாரின் தம்பி கருமத்தம்பட்டி அருகே உள்ள தென்னம்பாளையத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று 4 பேருக்கும் விடுமுறை என்பதால் அவர்கள் சதீஷ்குமாரின் தம்பியை பார்ப்பதற்காக ரயில் மூலம் கோவை வந்தனர் பின்னர் அவர்கள் சதீஷ்குமாரின் தம்பியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர் .ஆனால் அவர் அழைப்பை எடுத்து பேசவில்லை.இதனால் ரயில் நிலையத்தில் சுத்திய 4 பேரும் இயற்கை உபாதை கழிப்பதற்காக தண்டவாளத்தின் ஓரத்தில் நடந்து சென்றனர் அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் பகுதி அருகே வந்தபோது 4 பேரும் தண்டவாளத்தின் ஓரத்தில் அமர்ந்து பேசினர் .அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் 4 பேரும் சேர்ந்து தண்டவாளத்தில் 2இடத்தில் பெரிய கல்லை உருட்டி வைத்ததுடன் சிக்னல் பாக்சை கல்லால் உடைத்து சேதப்படுத்தியதும் இதனால் சிக்னல் எரியவில்லை என்பது தெரிய வந்தது.4 பேரும் குடிபோதையில் செய்துவிட்டதாக கூறினார்கள். இருந்தபோதிலும் அவர்கள் ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் கற்களை வைத்தார்களா? என விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்..
கோவை ரயிலை கவிழ்க்க சதி. 4 பேர் கைது.
