ராகுல் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் தங்கத்தேர் இழுத்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்..!

ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் காங்கிரஸ் நிர்வாகிகள் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.அந்த வகையில் மதுரை காந்தி மியூசியம் அருகே உள்ள பூங்கா முருகன் கோவிலில் காங்கிரஸ் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி மாநில பொதுச் செயலாளர் எஸ்.பி வரதராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பூக்கடை கண்ணன், மாவட்ட  பொதுச்செயலாளர் கார்மேகம், விவசாய அணி தலைவர் ரவிச்சந்திரன், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் வேலுப்பாண்டி, மாவட்ட துணைத்தலைவர்கள் சுந்தரமகாலிங்கம், டாக்டர் ரவிச்சந்திரன், காந்தி சிலை பராமரிப்பு குழு தலைவர் தேனூர் சாமிக்காளை, மாநில மகளிரணி செயலாளர் பஞ்சவர்ணம், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் விக்னேஸ்வரன், அகில இந்திய மாணவர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜீவ்காந்தி, பகுதி தலைவர் சக்திவேல், வார்டு தலைவர் கோவிந்தராஜ் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட செயலாளர் போஸ் நன்றியுரை கூறினார்.