வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வில் தோல்வி அடைந்ததால் கல்லூரி மாணவி தற்கொலை

கோவை ஜூன் 11 கோவை கணபதி,மணியக்காரன் பாளையம் ரோடு பூசாரிபாளையத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் டேவிட் . கண் கண்ணாடி கடை நடத்தி வருகிறார். இவரது மகள் மெர்லின் (வயது 20) இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.இவர்சமீபத்தில் நடந்த வேலை வாய்ப்பு நேர்முகத் தேர்வில் பங்கேற்றார் இதில் தேர்ச்சி பெறவில்லை. இதனால்மனம் உடைந்து நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து சரவணம்பட்டி போலீசில் தந்தை டேவிட் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.