கோவை ஜூன் 5 சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தெற்கு ரயில்வேயின் மதுரை பிரிவில் கொடைக்கானல் ரோடு – வாடிப்பட்டி – சோழவந்தான் ரயில் நிலையத்துக்கு இடையே தண்டவாள புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையொட்டி கோவை – நாகர்கோவில் பகல் நேர ரயில் உள்பட பல்வேறு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி கோவை – நாகர்கோவில் தினசரி ரயில் வண்டி ( எண் 16 322 )கோவை ரயில் நிலையத்திலிருந்து காலை 8 மணிக்கு புறப்படும் இந்த ரயில் நேற்று முதல் 30- ஆம் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்பட்டு திண்டுக்கல் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் திண்டுக்கல் முதல் நாகர்கோவில் வரை இயக்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோவை – நாகர்கோவில் ரயில் திண்டுக்கல் வரை இயக்கம்.
