கோவை மாநகர திமுக முன்னாள் பொறுப்பாளர் பையா கவுண்டர் தூக்கிட்டு தற்கொலை..

கோவை :தி.மு. க.கோவை மாநகர் மேற்கு மாவட்ட முன்னாள் பொறுப்பாளராக பதவி வகித்து வந்தவர் பையா கவுண்டர் என்ற கிருஷ்ணன்(வயது 65) இவர் காளப்பட்டியில் உள்ள தனது தோட்டத்து சாலையில் வசித்து வந்தார்.இன்று அதிகாலை 5 மணி அளவில் தங்கி இருந்த அறையில் தூக்கில் தொங்கியது தெரியவந்தது. தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் இதை பார்த்து அவரை கீழே இறக்கி பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலே அவர் இறந்து விட்டார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குடும்பத் தகராறு காரணமாக இவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..