கோவை வேளாண் பல்கலைக்கழகம்.தென்மேற்கு பருவமழை முன்னறிவிப்பு.

கோவை மே 30 கோவை வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பற்றிய முன்னறிவிப்புக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மார்ச், ஏப்ரல் மாதங்களில் பசுபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டிய கடல் பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்ப நிலை மற்றும் தென் மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றைக் கொண்டு ஆஸ்திரேலியாவில் இருந்து பெறப்பட்ட கணினி கட்டமைப்பு மூலம் 2025- ஆம் ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 60 சதவீதம் மழை அளவு எதிர்பார்க்கப்படுகிறது கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, நாமக்கல், , தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சராசரிக்கு ஒட்டிய மழையும் மற்ற மாவட்டங்களில் சராசரி மழையும் எதிர்பார்க்கப்படுகிறது .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.