தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து விநாடிக்கு 10,000 கன அடியாக சரிந்துள்ளது. இதனையடுத்து 2 வாரங்களுக்கு பிறகு ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மீண்டும் அனுமதி அளித்துள்ளது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக இப்பகுதிகளில் அருவிகளில் மழை நீர் கொட்டியது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ...

சிறப்பாக செயல்படுவதால் அதிமுக பற்றி மாநாட்டில் விஜய் பேசவில்லை எனறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோள்கள் போன்றவற்றை கட்சி தலைவர் ...

கோவை ஆர் .எஸ் .புரம் ,பூ மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 25) பூக்கட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் விநாயகபுரத்தைச் சேர்ந்த சிலம்பரசி ( வயது 23) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பூ மார்க்கெட் சித்தி விநாயகர் கோவில் வீதியில் வசித்து வந்தனர். ...

கோவை சரவணம்பட்டி ,மருதம் நகரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் ( வயது 66) இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். கடந்த வாரம் இவரது காலில் காயம் ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார் .இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் வைத்து விஷ மாத்திரைகளை தின்று மயங்கி ...

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி ( வயது 69) இவர் 2017- ஆம் ஆண்டு தாராபுரம் பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள ...

கோவை : சிறுவாணி அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணியின் நீர் பிடிப்பு பகுதியில் 31 மி. மீட்டர் மழையும் அடிவாரத்தில் 10 மி.மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து 44 அடியை தொட்டது. ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சென்னமலை ரோட்டில் உள்ள சிராஜ் நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 55) டிரைவர். இவரது மனைவி 22 ஆண்டுகளுக்குப் பின்பு கர்ப்பமானார். இந்த நிலையில் நேற்று அவருக்கு வீட்டில் வைத்து திடீர் பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவர் வீட்டில் உள்ள பாத்ரூமுக்கு சென்றார். அங்கு வைத்து அவருக்கு அழகான ஆண் ...

திருச்சி மன்னாா்புரம் அணுகு சாலையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தை திருச்சி மாநகர காவல் ஆணையா் ந.காமினி திறந்து வைத்தாா். தஞ்சாவூா் மாா்க்கமாக செல்லும் பேருந்துகள் – டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம், முத்தரையா் சிலை, சேவா சங்கம் பள்ளி, பென்வெல்ஸ் சாலை, அலெக்ஸாண்டிரியா சாலை வழியாக சோனா-மீனா திரையரங்கம் எதிரில் உள்ள தற்காலிக ...

திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி.வருண்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவெறும்பூர் கொள்ளிடம் சமயபுரம் முசிறி துறையூர் மற்றும் மணப்பாறை பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு வசதி செய்யப்பட்டு பொதுமக்களிடம் திருடுபவர்களை உடனுக்குடன் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சாதாரண உடையில் போலீஸாரும் ...

சென்னை: திருவொற்றியூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டதில் மாணவிகள் 39 பேர் மயக்கம் அடைந்தததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையை அடுத்த திருவொற்றியூரில் விக்டரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் நேற்று காலை திடீரென வாயுநெடி பரவியது. இதில் மாணவர்களுக்கு ...