சென்னை; இந்திய அளவில் தமிழ்நாட்டில் தனிநபர் வருவாய் 171 சதவீதம் உயர்ந்து இருப்பதாக தமிழக அரசு தரிவித்துஉள்ளது. மேலும் தமிழ்நாடு இந்திய அளவில் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக வளர்ச்சி பெற்றிருக்கிறது என குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தில் தனிநபர் வருவாய் 171 சதவீதம் உயர்ந்துள்ளதாக பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது என்பதை சுட்டிக்காட்டி, ...
வேங்கைவயல் விவகாரத்தில் நீதிமன்றம் மூலம் அரசியல் செய்வதை அனுமதிக்க இயலாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் தொடர் விசாரணை நடத்தி ...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணையை நடத்த வேண்டும் எனவும், காவல்துறை எல்லை மீறினால் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் இரவு நேரத்தில் நுழைந்த ஒருவர், அங்கிருந்த நபரை தாக்கி, அவருடன் பேசிக் கொண்டிருந்த மாணவி ஒருவரை ...
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்கு அருகே அமைந்துள்ள ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்திற்கு அருகே நடுவானில் இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டன. 60 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்களுடன் சென்ற அந்த விமானம் பிளாக் ஹாக் ஹெலிகாப்டருடன் மோதியது. பிஎஸ்ஏ ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் தரையிறங்க முயன்ற போது நடுவானில் ராணுவ ஹெலிகாப்டரில் மோதியதாகத் தகவல்கள் ...
கோவை சவுரிபாளையம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சதீஷ் (வயது 40) சாப்ட்வேர் இன்ஜினியர் .இவர் தனது வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு கடந்த 26- ஆம் தேதி வெளியூர் சென்று விட்டார்.நேற்று முன்தினம் இரவில் அவரது காரில் திடீரென்று தீ பிடித்து எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை ...
கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம், மைல்கல் ராஜேஸ்வரி கோவில் வீதியை சேர்ந்தவர் அறிவழகன் ( வயது 38) கட்டுமான தொழில் செய்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். மன அழுத்தத்தின் காரணமாக கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்தார். இந்த நிலையில் அவர் தனது மோட்டார் சைக்கிளில் சிங்காநல்லூருக்கு சென்றார். அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனை முன் ...
கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என தனித்தனியாக உள்ளனர்..கோவை சிறையில் கைதிகளின் இறப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாதந்தோறும் 4 கைதிகள் மரணம் அடைகிறார்கள். இந்த நிலையில் நேற்று ஒரு கைதி திடீர் மரணம் அடைந்தார். அவரது பெயர் அலெக்ஸ் (வயது ...
சென்னையில் மூளைச்சாவு அடைந்த 2 பேரின் உடல் உறுப்பு தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. செங்கல்பட்டு வல்லம் பகுதி ஆலப்பாக்கம் காலனியைச் சேர்ந்த பி.சதீஷ்குமார்(33) என்பவர் தலைவலி, கையில் உணர்வின்மை மற்றும் நினைவின்மை காரணமாக போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பக்கவாத அறிகுறிகள் இருந்ததைக் கண்டறிந்த மருத்துவர்கள், தீவிர சிகிச்சை அளித்து ...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது 100-வது செயற்கைக்கோளான என்விஎஸ்-02-வை இன்று விண்ணில் ஏவுகிறது. இந்த மைல்கல் பணி ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் நடைபெற்றது. இத்தளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் மூலம் என்விஎஸ்-02 செயற்கைகோள் விண்ணில் பாய்கிறது. இந்த செயற்கை கோளில் ...
பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் பலியானதும், பலர் காயமடைந்துள்ள செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளாவில் செவ்வாய்க்கிழமை வரை 16 நாள்களில் 15 கோடிக்கும் அதிகமான ...













