வளிமண்டல சுழற்சியால் நேற்று பல மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டிருந்த நிலையில் ...

கோவை கணபதியைச் சேர்ந்த 2-ம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுமியை முதியவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த 69 வயது முதியவரை ...

கோவை சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் நேற்று மாலை விமான நிலையம் பின்புறம் உள்ள கருப்பராயன் கோவில் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேபடும்படி பைக்கில் வந்து ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அவரிடம் உயர்ரக போதை பொருள் மற்றும் போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள்  பறிமுதல் செய்யப்பட்டன .இது ...

கோவை : கல்லூரி மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட “போலீஸ் புரோ” திட்டத்தை பள்ளிக்கூடங்களிலும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- கல்லூரிகளில் போலீஸ் புரோ திட்டம் தொடங்கப்பட்டதால் போதை பொருள் பயன்படுத்துவதை தடுக்க மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது .இது மிகவும் உதவியாக இருந்தது அத்துடன் மாணவர்கள் பல்வேறு ...

கோவை நாகர்கோவில் திருச்சி – பாலக்காடு ரயில்கள் இன்று முதல் சிங்காநல்லூர், இருகூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்சி – பாலக்காடு டவுன் விரைவு ரயில்,பாலக்காடு டவுன் – திருச்சி விரைவு ரயில், ...

விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த உடனேயே பயிர்கடன் வழங்கும் மாநில அளவிலான திட்டத்தின் தொடக்க விழா தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டுறவுத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், இணைய வழியில் பயிர் கடன் வழங்கும் ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வேவர்லி எஸ்டேட்டில் தோட்டத் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் சொர்பத் அலி என்பவரின் 7 வயது மகன் நேற்று முன்தினம் கரடி தாக்கி உயிரிழந்த சம்பவம் அறிந்து நேற்று விரைந்து சென்ற பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அதைத் தொடர்ந்து தமிழக அரசு ...

சென்னை: ஜூன் 19, 2025 நிலவரப்படி, மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டமான சூழ்நிலை நிலவினாலும் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை.தற்போதைய விலை உச்சமாக இருக்கலாம் என்றும், தங்கத்தின் விலை எதிர்காலத்தில் ஒரு அவுன்ஸுக்கு $3,400-லிருந்து $2,400 வரை குறைய வாய்ப்புள்ளது என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். அதாவது 1 அவுன்ஸுக்கு.. கிட்டத்தட்ட 31 கிராம் ...

கோவை ஜூன் 17 கோவை மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கலெக்டர் அறிவிப்பின்படி தினக்கூலியாக ரூ. 770 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு கடந்த 9-ம் தேதி. போராட்டத்தை தொடங்கினர் .இந்த போராட்டம் நேற்று 8-வது நாளாக தொடர்ந்து நீடித்தது. இதற்கிடையில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் தூய்மை ...

கோவை ஜூன் 17 உத்தர பிரதேச மாநிலத்தில் மாட்டு இறைச்சி ,வைத்திருந்த முகமது அக்லக் என ற முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கடந்த 2015- ஆம் ஆண்டு ஒரு அமைப்பு சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகமும் போராட்டம் நடைபெற்றது .இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ரகமத்துல்லா, நவ்ஷாத் ஆகியோர் மத ...