ராமநாதபுரம் ரயில் நிலையம் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின்விளக்குகள் எரியாததால் பொதுமக்கள்,பயணிகள் அவதியடைகின்றனர். ரயில் பயணிகள் வந்து செல்லும் இந்தப் பகுதியில் அதிக வெளிச்சத்தை அளிப்பதற்காக நகராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட இந்த உயர் கோபுர மின்விளக்குகள் பயன்பாட்டில் அல்லாமல் தற்போது காட்சி பொருளாக மாறிவிட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. ராமநாதபுரம் ...

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, திங்கட்கிழமை போப் பிரான்சிஸ் மறைவுக்குப் பிறகு, மரியாதை செலுத்தும் விதமாக இந்திய அரசு மூன்று நாள் அரசு துக்கத்தை அறிவித்துள்ளது. ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளிலும், போப்பின் இறுதிச் சடங்கு நாளிலும் நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும். போப் பிரான்சிஸ் (88) திங்கட்கிழமை வாடிகனில் ...

சென்னையில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் ஹூஹான் மாகாணத்தில் இருந்து உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. இந்த வைரஸால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகளவில் இருந்தது. முதல் அலை, ...

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக கொடை வெயிலின் கடுமையான வெப்ப அலையிலிருந்து தாகம் தீர்த்துக் கொள்ளும் விதமாக ஏர்வாடி முக்கு ரோடு , பேருந்து நிறுத்தம் , வள்ளல் சீதக்காதி சாலை, கிராம நிர்வாக அலுவலகம், மீன் மார்க்கெட், இந்து பஜார் போன்ற இடங்களில் பொதுமக்கள் அதிகமாக ...

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஸ்லிம் பஜார் பகுதியில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் பாஜக அரசு கொண்டுவந்துள்ள வக்பு திருத்த சட்ட மசோதாவை கண்டித்து அதனை ரத்து செய்யக் கோரி தாலுகா ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக ஆட்சி காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடர் தாக்குதல் அதிகரித்து வருவதாகவும் ...

தாய்லாந்து மற்றும் மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 1000 பேர்   உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி  தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் மீட்பு பணிகளிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வெறுங்கைகளால் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மியான்மர் நாட்டின் சாகைங் நகரின் வடமேற்கு பகுதியில் 7.7 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் 11.50 ...

சென்னை: ”பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில், எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள்.. நேற்றைய தினம் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், போராட்டம் தொடரும் என்று மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கேஸ் சிலிண்டர்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் ...

உத்தர பிரதேச மாநிலம், மீரட்டில் ரம்ஜான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை தொழுகையை முன்னிட்டு, சாலைகளில் தொழுகை நடத்துவதைத் தடுக்க காவல்துறை கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொழுகைகள் மட்டுமின்றி, பிற மதச் செயல்பாடுகளும் மசூதிகளிலேயே நடத்தப்பட வேண்டும் என்றும், பொதுவழிகளில் தொழுகை நடத்தத் ...

கோவை மாவட்ட வக்கீல்கள் சங்கத்தில் உள்ள 11 பதவிகளுக்கு தேர்தல் நேற்று நடைபெற்றது . இதில் இரு அணிகளாக வேட்பாளர்கள் களம் இறங்கினார்கள். இதில் தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவர் பாலகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து முன்னாள் தலைவர் கே. எம். தண்டபாணி போட்டியிடுகிறார். அவர்கள் தங்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்து வாக்கு ...

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் உள்ள மருந்து கடை உரிமையாளர்கள் மற்றும் கூரியர் சர்வீஸ் நிறுவன உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் கோவை மாவட்டத்தில் போதைப் பொருள்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் பொருட்டும், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் மேட்டுப்பாளையம் உட்கோட்டங்களின் துணை ...