ஓசூர் ரயில் நிலையத்தில் 5 வயது சிறுமியை தவறவிட்ட தாயார். காலை 9 மணிக்கு கர்நாடக மாநிலம் பகுதியில் இருந்து ஐந்து வயது சிறுமி ஓசூர் ரயில் நிலையத்தில் 2 வது பிளாட்ஃபாமில் காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்ட சமயம் தனியாக நின்று கொண்டு அழுது கொண்டிருந்தாள் . இருப்பு பாதை காவல் நிலைய உதவி ...
கோவை, மேற்கு தொடர்ச்சியாக மலை பகுதியில் ஒட்டியுள்ள, சிறுவாணி சாரல் என சுற்றுலா பயணிகள் விரும்பும் இடமான கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா கடந்த இரண்டு மாதங்களாக தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குளிக்க செல்லும் பாதையை வனத்துறையினரால் மூடப்பட்டது. தொடர்ந்து அனுமதி மறுக்கபட்டு இருந்தனர். இந்த நிலையில் கடந்த ...
தமிழகத்தில் இன்று காலை தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித்திருவிழாவில் அரோகரா கோஷம் விண்ணதிர தேரோட்டம் துவங்கியது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து வடம் பிடித்து தேர் இழுத்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 24ம் தேதி ஆவணித் திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கிய ...
விநாயகர் சதுர்த்தி… பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளை அனுமதிக்க கூடாது : காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு.!
சென்னை: விநாயகர் சதுர்த்திக்காக பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால் செய்யப்பட்ட சிலைகளை வைக்க அனுமதிக்கக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், எளிதில் மக்கும் தன்மையுள்ள சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும், என உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை கிராமத்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி அப்பகுதியைச் ...
திருப்பூர் மாவட்டம் அவினாசி பக்கம் உள்ள கருவலூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் மணிகண்டன் ( வயது 31) பி.இ. பட்டதாரி .இவர் கடந்த 6 ஆண்டுகளாக கோவை சிங்கநல்லூர், உப்பிலிபாளையம், சென்னிமலை கவுண்டர்லே -அவுட்டில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்து ஆன்லைன் மூலம் பங்கு சந்தை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு இன்னும் ...
கோவை கரும்புக்கடை, சாரமேடு பகுதியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். இவருக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தனர். இது இவருக்கு பிடிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று கடிதம் எழுதி வைத்துவிட்டு எங்கோ மாயமாகி விட்டார். இது குறித்து கரும்புக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் தங்கம் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.. ...
பொள்ளாச்சி பக்கம் உள்ள ஜமீன் ஊத்துக்குளி ,ராமர் கோவில் வீதியை சேர்ந்தவர் கதிர்வேல் ( வயது 51 )கட்டிட தொழிலாளி.குடிப்பழக்கம் உடையவர். இவர் நேற்றுகுடிபோதையில் வீரமாத்தி அம்மன் கோவில் அருகே உள்ள நெல்லிக்காய் மரத்தில் காய் பறிக்க ஏறினாராம்.திடீரென்று கால் வழுக்கி உயரத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது .அவரை சிகிச்சைக்காக ...
குடியரசுத் தலைவர் பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சக பதக்கங்கள், தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்களை தேர்வு செய்யப்பட்ட போலீசாருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வழங்கினார். அதன்படி, கோயமுத்தூர் மாவட்டத்தில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உள்பட 21 பேருக்கு விருது வழங்கப்பட்டது. அதில் சிறந்த புலனாய்வுப் பிரிவினருக்கான முதலமைச்சர் விருது பெற்ற சூலூர் காவல் நிலைய ...
கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒருசில தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியர்களிடம் விபரக் குறிப்பேட்டில் சாதி, மத விபரங்களை கட்டாயம் தெரிவிக்கும்படி வற்புறுத்தியத்திற்கு எதிராக உரிய ஆவணங்களுடன் கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்), ஆகியோரிடமும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்திலும் முறையிடப்பட்டது. ...
கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை நகரில் பள்ளிகளில் குழந்தைகளை விட இருசக்கர வாகனங்களில் அழைத்துவரும் பெற்றோர் ஹெல்மெட் அணியாமல் வருவதாக புகார்கள் வந்தன. இதனால் நகரம் முழுவதும் பள்ளிக்கூட பகுதிகளில் 4 நாட்கள் தீவிர வாகன சோதனை நடந்தது. இதில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர ...













