பெங்களூர்: இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலமான மசூதிக்குள் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷம் எழுப்புவது மத நம்பிக்கையை புண்படுத்தாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், மசூதியில் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டது தொடர்பாக 2 நபர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கையும் கர்நாடக ஹைகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ...

கோவையில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளுக்கு மழை நீர் புகுந்தது .மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பரவலாக மழை பெய்தால் நொய்யல் ஆற்றில் 300 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அந்த ஆற்றில் உள்ள முதல் தடுப்பணையான ...

தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் நாளை முதல் அதீத கனமழைபெய்யும் என்பதால் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மழையைத் தொடர்ந்து சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. சென்னைக்கு ரெட் அலர்ட் ...

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விடாது இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகனமழை பெய்யும் என வானிலை மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுபோலவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை ...

திருச்சியில் தொடர்ந்து அதிகாலை தொடங்கி இரவு வரை அவ்வப்போது பெய்த லேசான மற்றும் மிதமான மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருச்சியில் கடந்த 4 நாள்களுக்கும் மேலாக தொடா்ந்து மழை பெய்து வந்த நிலையில் திங்கள்கிழமை அதிகாலையும் மழையுடன் தொடங்கியது. இதர மாவட்டங்களில் ஒருசில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், திருச்சியில் விடுமுறை இல்லை. காலையிலேயே ...

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வரச் சரக பகுதியில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளும், அரிய வகை பறவைகளும் உள்ளன. இந்த நிலையில் கோட்டூர் பிரிவு, பருத்தியூர், உமாண்டி பகுதியில் வனத்துறையினர் நேற்று ரோந்து சுற்றி வந்தனர். அப்போது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து சுமார் 1 கிலோ ...

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம்அருகே உள்ள பூச்சியூரை சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 37) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி பானு என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.நேற்று தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஒரு பூனை தவறி விழுந்து விட்டது. அந்தப் பூனையை மீட்பதற்காக கார்த்திக் கிணற்றினுள் இறங்கினார். அப்போது தண்ணீரில் மூழ்கி இறந்தார் ...

தாம்பரம்: பொதுமக்கள் வாகனங்களை பாலத்தின் மீது நிறுத்த எவ்வித தடையும் இல்லை, அபராதம் வசூலிக்கபடாது என தாம்பரம் மாநகர காவல்துறை அறிவிப்பு. உதவி தேவைபடும் பட்சத்தில் கட்டுப்பாட்டு அறை எண் கொடுக்கபட்டுள்ளது. பாலங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதாக வதந்தி பரவி வருகிறது . அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். ...

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வேலை பார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை: தமிழ்நாட்டின் சென்னை, திருவள்ளூர், சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று (அக்.14) மஞ்சள் அலர்ட், நாளை ...

சென்னை: சென்னைக்கு அதிகனமழை எச்சரிக்கை எதிரொலியாக, முன்னேற்பாடு நடவடிக்கையாக, சென்னையில் 50 இடங்களில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழையின்போது தமிழ்நாடு முழுவதும், ஒரு உயிர்சேதம் கூட ஏற்படாத வண்ணம், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், வானிலை ஆய்வு மையம், இன்று ...