அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்குத் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.அவ்வாறு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு எளிதாகச் சென்று வர இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதில் மிகவும் விரைவாகவும், பழனி மலையின் இயற்கை அழகை ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 66,304 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 31,811 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோயில் உண்டியலில் ரூ.4.51 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர். பக்தர்களுக்கு 4.05 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. 1.93 லட்சம் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. இன்று காலை வைகுண்டம் கியூ காம்பளக்சில் ...
மொஹரம் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களை ஒட்டித் தொடர் விடுமுறை கிடைத்துள்ளதால், அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.நேற்று மொஹரம் பண்டிகைக்கான அரசுப் பொது விடுமுறை என்பதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான ...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சேவைக் கட்டணம் மற்றும் சிறப்பு தரிசன கட்டணங்களை உயர்த்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.இது தொடர்பான அறிவிப்பில் கோயிலின் வருவாயை அதிகரிக்கும் வகையில் பல்வேறு கட்டணங்களை உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதன்படி, தங்கரத உலா திட்டத்திற்கு 2 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும்,அதற்கு நிரந்தர வைப்பு ...
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு முதல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நெரிசல் மேலாண்மை அமைப்பை அறிமுகப்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த முறை உதவியாக இருக்கும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். ...
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமி கோயிலில் இருந்து காணிக்கை திருடப்பட்டதாக அண்மையில் புகார் எழுந்தது. இதுகுறித்து 3 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில், தர்மசேனா அமைப்பின் தலைவர் சந்தோஷ் துபே ஒரு புதிய புகாரை அயோத்தி காவல் நிலையத்தில் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: 1989-ல் துவங்கிய ...
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட அனைத்துக் கோயில்களிலும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்காமல், சிறப்பு வழியில் விரைவாகச் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.சமீபத்தில் முக்கியக் கோயில் ஒன்றிற்குச் சென்ற கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தரிசனத்திற்காகப் பொது வரிசையில் பல ...
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் காணிக்கை மற்றும் நன்கொடை முறைகேடு புகார்கள் தொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுப் பரபரப்பு நிலவி வரும் சூழலில், தற்போது பிரதமர் நரேந்திர மோடி நட்ட புனித ‘பாரிஜாத மரம்’ காணாமல் போயுள்ளதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.அயோத்தி ஸ்ரீ ராம் ஜன்மபூமி திருத்தலத்தில் ...
தமிழகத்தில் 214 முக்கிய கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறநிலையத் துறை அறிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறைச் சட்டம் 1959-ன்படி, கோயில் நிர்வாகத்தில் அறங்காவலர் குழுவுக்கே முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குழு வழிகாட்டுதலில்தான் கோயில் செயல் அலுவலர் பணியாற்ற வேண்டும் என்பது விதி. கோயில்களின் ஆண்டு வருமானம் அடிப்படையில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் ...
தமிழகத்தில் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது மற்றும் முறைகேடுகளைத் தடுப்பது குறித்த முக்கிய ஆய்வுக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை தலைமையகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கோவில்களில் உள்ள பிரசாத கடைகள் தொடர்பாகப் பல புகார்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருப்பதாகக் குறிப்பிட்டார். ...












