ஐந்து மாநில தேர்தலை முன்னிட்டு, நாளை காலை 7 மணி முதல் ஏப்ரல் 29-ம் தேதி மாலை 6.30 மணி வரை கருத்து கணிப்பு நடத்த அல்லது வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தலை முன்னிட்டு செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் மட்டுமன்றி பலரும் சமூக வலைதளங்களில் தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிடுகின்றனர். இது தொடர்பாக தேர்தல் ...
தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், திமுகவிடம் பல்வேறு இழுபறிக்கு பின்பு முதல் ஆளாக 28 தொகுதிகளை வாங்கிய காங்கிரஸ், வேட்பாளர் பட்டியலை வெளியிடாமலேயே காலம் தாழ்த்தி வந்தது. எந்த தொகுதிகள் என முடிவான பின்னும், அந்த தொகுதிகளில் யாரை வேட்பாளர்களை நிறுத்துவது என கட்சிக்குள்ளேயே ...
தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை பார்ப்பதில் ஏராளமானோர் ஆர்வம் காட்டியுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் இணையப் பக்கத்தில் விஜய்யின் வேட்பு மனு விவரங்களை 3.25 லட்சத்துக்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்து பார்த்துள்ளனர். தவெக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். கடந்த மார்ச் 30 ஆம் ...
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், ‘மாநில அரசியலுக்கு நீங்கள் வரவேண்டும் என்று போட்டியிட்டு வெற்றி பெற்றால் உதயநிதிக்கு இது போட்டியாக இருக்கும் என ஆதவ் அர்ஜூனா பேசியுள்ளார். மேலும், திமுக அழுத்தம் கொடுத்து உங்களை வாபஸ் பெற ...
சென்னை விமான நிலையத்துக்கு காலை 10 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் வந்தடையும் ராகுல் காந்தி, அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். பின், 12 பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய சிறிய ரக விமானத்தில், அவர் புதுச்சேரிக்கு செல்ல உள்ளார். அதன்பின், சென்னைக்கு அவர் வருவது தொடர்பாக எதுவும் திட்டமிடப்படவில்லை என கூறப்படுகிறது. ...
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடாதது குறித்து எழுந்த யூகங்களுக்கு, அவர் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கேரளாவில் தேர்தல் பிரசாரத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தான் போட்டியிடாததில் எந்த ரகசியமும் இல்லை என்றும், தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்காகப் பிரசாரம் செய்ய வேண்டும் என்பதே கட்சித் தலைமையின் ஆணை என்றும் தெளிவுபடுத்தினார். ...
திமுக கூட்டணியில் மேலூர் தொகுதியை தவிர, காங்கிரஸ் போட்டியிடும் 27 முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து மே 4-ஆம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்த தேர்தலில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் ...
தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் விவகாரம் பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலங்களில் விவாதமானது.இந்த சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் குறித்து தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து, நீதிமன்றப் படியேறி வாதிட்டவர் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டது தொடர்பான ஆட்சேபணைகளை விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ...
தமிழ்நாடு பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், பாஜக சார்பில் இன்று வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் ...
அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை. விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணி, கோயம்புத்தூர் வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன், அவிநாசி தனி தொகுதியில் எல்.முருகன், சாத்தூர் தொகுதியில் நயினார் நாகேந்திரன், மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌந்தர்ராஜன் போட்டியிடுகின்றனர். ஆவடி ...











